Saturday, January 25, 2014

தாத்தா கதை

தாத்தா என்றாலே எனக்கு ஞாபகம் வருவது "கதை" தான். சின்ன வயசில்  "தாத்தா.. ஒரு கதை சொல்லு ...ஒரே ஒரு கதை சொல்லு" என்று நாம் தாத்தாவை நச்சரித்திருக்கலாம்.

வயதுவந்த பிறகு கல்லூரி காலத்திலிருந்தே  நண்பர்களுக்கு பல "நல்ல" கதைகளை நான் சொல்லிவந்த்திருக்கிறேன். அதற்க்குக் காரணம் நம்ம கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் தாத்தாதான். அவரை இந்த மாதத்தில் ஒரு நாள் சந்தித்து நேரடியாகக் கதை கேக்கலாம் என்றிருக்கிறேன்.

அவர மாறி ஒரு நல்ல கதை சொல்லி வேறயாரமில்ல!! மனுசன படிக்கும் போதே அவரு நம்ம முன்னாடி உக்காந்து கதை சொல்லற மாறித்தான்  இருக்கும். அவரு எனக்கு பக்கத்தில இல்லாத சேக்காளியாத்தான் இன்னமும் இருக்காரு.

நிற்க!

1 comment:

  1. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete