Saturday, January 25, 2014

மீன் உணவகம் - தமிழ் நாடு மீன் வளர்ச்சி கழகம்

இன்று சத்தியம் தியேட்டரில் "ரோனின்" (RONIN) என்ற படத்தை பாதியிலிருந்து பார்த்துவிட்டு மதியம் 2:30 க்கு வெளியே வந்தபோது "கொலைப்பசி". எங்கே போகலாம் என்று யோசித்தபோது டக்கென ஞாபகம் வந்தது தேனாம்பேட்டையில் உள்ள தமிழக மீன் வளர்ச்சித்துறையின் "மீன் உணவகம்". ரொம்ப நாளாக இங்கே சாப்பிடவேண்டும் என்று நினைத்தது இன்று அமைந்துவிட்டது.

அட்டகாசமான மீன் பிரியாணி, வஞ்சிரம் மீன் மற்றும் பிஷ் பிங்கரை ஒரு பிடி பிடித்தோம். மொத்தம் 390 ரூ தான். குறைந்த விலையில் நறைந்த தரத்தை சாப்பிட்டு முடித்ததும் உணரலாம்.

இதுபோக இறால் பிரியாணி, இறால் வறுவல், நண்டு வறுவல் மற்றும் கணவை என பல கடல் பிராணிகளின் உணவு அணிவரிசை நீள்கிறது. (காண்க: விலைப்பட்டியல்). மதியம் புல் மீல்ஸ் உண்டு (மீன் குழம்பு).

ஒரு குறை என்னவென்றால் நின்று கொண்டே சாப்பிடவேண்டும். பரவாயில்லை ருசிக்கு நின்று கொண்டே கூட சாப்பிடலாம். 

அருகிலேயே மீன்விற்பனை நிலையமும் உண்டு. சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு சமையல் செய்ய வாங்கியும் செல்லலாம்.

இடம்: தேனாம்பேட்டை, மத்திய கணக்காயர் அலுவலகம் அருகில்.
(கவர்ன்மெண்ட் கடை என நினைக்க வேண்டாம். ருசிக்கு நான் கியரண்டி)



No comments:

Post a Comment