Tuesday, February 11, 2014

கல்வி வியாபாரம்:

கடந்த வாரம் "பிராயிலர் பள்ளிகள்" என்ற தலைப்பில் விகடனில் பாரதி தம்பி எழுதியிருந்த நாமக்கல் மாவட்ட தனியார் பள்ளிகள் பற்றிய கட்டுரை மேல் தட்டு மற்றும் உயர் நடுத்தர வர்கத்தின் பணத்தைக் கொட்டி படிக்க வைக்கும் திறன் பற்றியும் இந்த பள்ளிகளால் தத்து எடுக்கப்பட்டு, அங்கே நடக்கின்ற கொடுமை தாளாமல்  உயிரை மாய்த்துக்கொண்ட "நன்றாய்" படிக்கும் ஏழை மாணவர்கள் பற்றியும் அலசி ஆராய்ந்திருந்தது.

ஒரு சாதாரண அரசு துவக்கப்பள்ளியிலும் மற்றும் அரசு உதவிபெறும் கிருத்தவ மேலாண்மைப் பள்ளியிலும் (இலவசமாக அல்லது அதிக  பட்சம் ஆயிரம் ரூபாய் செலுத்தி)தமிழ் வழிப் பயின்று என்னால் ஓரளவு இந்த சமுதாயத்தில் தாக்குப்பிடித்து முன்னேற முடிகிற போது இலட்சங்களில் கொண்டுபோய் கொட்டும் இன்றைய அவலம் மிகுந்த மன வேதனை தருகிறது.

இந்த கொடுமைக்கார தனியார் பள்ளிகளை விட சிறந்த அரசு மாதிரிப் பள்ளிகளில் குழந்தைகளைப் படிக்க வைத்து  அவர்களை நல்ல மனிதர்களாக இந்த சமுதாயத்திற்கு தர முயல வேண்டுமே அன்றி வெறும் பணம் பண்ணும் இயந்திரங்களாக  அல்ல. நண்பர்களே சிந்தியுங்கள்!!

No comments:

Post a Comment